கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள் - சிங்கப்பூராக மாறவுள்ள இலங்கை
சிங்கப்பூரின் குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் 06 பேர் ஒரு வார காலப் பயணமாக இலங்கை வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் டிரான் அலஸ், சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர், சண்முகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிங்கப்பூர் போன்ற தரத்தை அடைந்து, மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து குடிவரவு முறையை மேம்படுத்த ஒத்துழைப்பை வழங்குவதே இந்த விஜயத்தின் நோக்கம் என அமைச்சு தெரிவித்துள்ளது.
நவீனமயப்படுத்தல்
இலங்கையில் குடிவரவு, வீசா வழங்கல் மற்றும் குடியுரிமை தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த ஒத்துழைப்பு பங்களிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அனைத்து அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுக்குப் பின்னர் சிங்கப்பூரில் தற்போதுள்ள உயர்நிலையைக் கொண்டுவர பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வழங்குமாறு சிங்கப்பூர் பிரதிநிதிகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan