ஐ.எம்.எப் உடனான ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதம்! கிரியெல்ல காட்டம்
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நாடாளுமன்றில் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்
மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளையே நாம் கோருகிறோம்.
அவைத்தலைவர் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பில் கருத்துரைக்கின்ற போதிலும், இதுவரையில் ஒப்பந்தம் சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அடங்கிய கோவையே நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட வேண்டிய ஒப்பந்தம் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஒப்பந்தம் சபையில் சமர்ப்பிக்கப்படாத நிலையிலேயே நாங்கள் வாதப்பிரதிவாதங்களை நடத்துவதற்காக ஒன்று கூடியுள்ளோம். ஜனாதிபதியிடம் நாங்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
எனினும் இதுவரை சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தமோ, அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அடங்கிய ஆவணமோ இதுவரை சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
