ஒரு இலட்சம் ரூபாவுடன் இலவச டீசல்: அரசாங்கத்தின் சலுகை
பெரும்போகத்தில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் வறட்சி காரணமாக பயிர்கள் சேதமடைந்த 65,000 ஏக்கர் விவசாயிகளுக்கே இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.
உர கொள்முதல் செய்ய அரசு வழங்கும் மானியம் 15,000 ரூபாவுடன் ஒரு ஹெக்டேருக்கு இழப்பீடாக ஒரு இலட்சம் ரூபாவுக்கு கூடுதலாக இந்த சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

எஞ்சியுள்ள டீசல்
கடந்த பருவத்தில், இலங்கையில் உள்ள விவசாயிகளுக்கு சீன அரசாங்கம் 6.5 மில்லியன் லீட்டர் டீசலை இலவசமாக விநியோகித்திருந்தது.
எனினும் பெருமளவிலான சிறுபோக நெல் விவசாயிகள் அதனை பெற்றுக்கொள்ள வராததால் 02 மில்லியன் லீட்டர் டீசல் எஞ்சியுள்ளதாக அமைச்சு தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan