அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி

Sri Lanka Parliament Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri lanka Tamil News General Election 2024
By Thileepan Nov 10, 2024 11:36 AM GMT
Report

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் சக்தி தேசிய மக்கள் சக்திதான் என்றும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டம் வவுனியா நகரசபை விளையாட்டுமைதானத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட டொலர்கள்! பலமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் நாமல்

உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட டொலர்கள்! பலமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் நாமல்

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், எமது நாடு எல்லா வகையிலும் பிளவுபட்டுள்ளது, இந்த பிளவுகளால் எமது நாடு முன்னோக்கி செல்ல முடியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் பிளவுபட்ட யுகம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி | Sri Lanka General Election 2024

ஜனாதிபதி தேர்தலின் போது நாம் பலமான இயக்கம் என்பது வடக்கு மக்களுக்கு தெரியாது. அதனால் தான் பழைய அரசியல் கட்சியையே தெரிவு செய்தனர்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அதிகமான வேலைகளை  நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக தேசிய மக்கள் சக்தி கொண்ட அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.

அனைத்து மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசியல் இயக்கமாக ஒன்றிணைவதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். 

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்படும். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். 

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி | Sri Lanka General Election 2024

அதேவேளை, வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருக்கின்றன. அந்தக் காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு நாங்கள் வழங்குவோம். எங்களுக்குத் தெரியும் இங்கு யுத்தம் ஒன்று நடந்தது. பல்வேறு அநீதிகளுக்கு முகம் கொடுத்தோம்.

இன்று அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய விரைவில் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதியளிக்கிறேன். இது சமத்துவமான ஒற்றுமையான ஆட்சி. இதனை தென்பகுதி எதிர்க்காது.

பிரிவினை அரசியல் 

ஆனால் அன்று அப்பிடி அல்ல. வடக்கில் இவ்வாறு ஒன்று நடந்தால் தென்பகுதி அதற்கு எதிராக இருந்தது. எங்களை பிரித்து அரசியல் செய்தார்கள். நாங்கள் இன்று அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். வடக்கின் மீன் வளத்தை பெரிய அளவில் வேறு நாடுகள் வந்து சூறையாடுகின்றன. எமது மீன்வளம் அழியும்வாறாக அதனை செய்கின்றனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி | Sri Lanka General Election 2024

நாங்கள் அரசு என்ற வகையில் எமது கடற்றொழிலாளர்களின் உரிமைக்காக வடக்கில் வாழும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். சூரியஒளி இன்று மதிப்பு வாய்ந்துள்ளது. அது எமதுசக்தி.

அதனை துண்டு துண்டாக விற்பதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டும். இந்த வளங்களை நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும். கேரளா கஞ்சா உட்பட போதைப்பொருள் பிரச்சனை இங்கு இங்கு இருக்கிறது. மன்னார் உள்ளிட்ட கடல் ஊடாக அவை வருகின்றன. அவற்றை தடுக்க வேண்டும்.

எனவே, புதிய ஒரு நிலைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்லவேண்டும். அத்துடன் எமது முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயம் இருக்கும். அதேபோல் கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய் மானியம் அதிகரிக்கப்படும். அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்படும். அது பலருக்கு கிடைக்காது அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனை மீள் பரிசீலனை செய்வோம்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி | Sri Lanka General Election 2024

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ஜனவரியில் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய நிதி வழங்குவோம். விவசாயிகளின் உரமானியத் தொகை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கிராமய விவசாயத்தை முன்னேற்றுவோம். மக்களின் வறுமையை ஒழிப்போம். மக்களது வறுமையை ஒழித்து கிராமிய பொருளாதாரத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்புவோம்.

எமது ஆட்சி 3 மாதம், 6 மாதம், 1 வருடம் என கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் சொல்கின்றோம் இந்த நாட்டை கட்டியெழுப்பும் வரை எமது ஆட்சி தொடரும். ராஜபக்ச, பிரேமதாச, ஜே.ஆர், விக்ரமசிங்க, பண்டாரநாயக்க என மேட்டுக் குடியிடம் இருந்த ஆட்சி அதிகாரம் தற்போது மக்களிடம் வந்துள்ளது. இந்த மாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் புலம்புகிறார்கள்.

இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். அவர்களுக்கு நான் ஒரு சவால் விடுக்கின்றேன். முடிந்தால் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கை விட ஒரு வாக்கு அவர்கள் கூட பெற்றுக் காட்டட்டும்.

ஆனால் எமது தேசிய மக்கள் சக்தி அதை விட அதிக வாக்குகளை பெறும் என கூறுகின்றேன். நவம்பர் 14ஆம் திகதி மிளகாய் தூள்களுடனும், கத்திகளுடனும, நாடாளுமன்றம் வந்து சண்டை போட்டவர்களையும், ஊழல் வாதிகளையும் களைய நாடாளுமன்றத்தை சிரமதானம் செய்து கழுவி சுத்தம் செய்து திசைகாட்டியால் நிரப்பி இந்த நாட்டை மக்கள் எதிர்பார்க்கும் ஒரு நாடாக மாற்றிக் காட்டுவோம்” என்றார்.

லசந்த - வசீம் தாஜூதீன் கொலைகளில் தொடர்புடையவர்கள் குறித்து ஜனாதிபதி அளித்துள்ள உறுதி

லசந்த - வசீம் தாஜூதீன் கொலைகளில் தொடர்புடையவர்கள் குறித்து ஜனாதிபதி அளித்துள்ள உறுதி

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தேவையான பணம் அரசாங்கத்திடம்!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தேவையான பணம் அரசாங்கத்திடம்!

மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US