மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளரான வைத்தியரை தேடிச் சென்ற பொலிஸார்
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் வைத்தியர் ஸ்ரீநாத்தினை தேடிச் சென்று பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மதியம் 2.30 மணியளவில் இவ்வாறு பொலிஸார் தேடிச் சென்று விசாரணை நடத்தியுள்ளதாக குறித்த வைத்தியர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அலுவலகம் ஒன்றை அமைத்திருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தி இந்த விசாரணையை அவர்கள் மேற்கொண்டிருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸார் விசாரணை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றையதினம் அலவலகம் ஒன்றிற்கான வாஸ்து சாந்தி நிகழ்வு ஒன்றினை நடத்தியிருந்தோம். அதில் எமது நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும், இந்த நிகழ்வு சம்பந்தமாக தவறான முறைப்பாடு வழங்கப்பட்டு இன்றையதினம் பொலிஸார் எம்மை தேடி வந்து விசாரணை நடத்தினர்.
நாங்கள் தேர்தல் அலுவலகம் ஒன்றை அமைத்திருப்பதாக தெரிவித்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. எனினும், நாங்கள் அந்த கட்டிடத்தில் எந்தவிதமான தேர்தல் அலுவலகத்தையும் அமைக்கவில்லை.
தேர்தல் தொடர்பான பதாதைகளோ, பிரசுரங்களோ கூட அங்கு இருந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த வைத்தியர் அந்தப் பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் எனவும், இதன் காரணமாக ஏதேனும் அரசியல் பிரமுகர்கள் இவ்வாறு முறைப்பாடு அளித்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri