ஈபிடிபியின் வன்னி மாவட்ட வேட்பாளர் விபரம் வெளியானது
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) வன்னி மாவட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மை வேட்பாளர்
அந்தவகையில், வன்னி தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கிறிஸ்தோபர் டினேஸ் றொசின்ரன், மதுர பிரபோத் ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், வன்னித் தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தி அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ், வின்சன் டிபோல் அருள்நாதன், சின்னத்துரை கலாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஞானப்பிரகாசம் மரியசீலன், முருகேசு கதிர்காமநாதன், இந்திரகுமாரன் செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
