நெருக்கடியான நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் - அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
இலங்கை ஏற்கனவே கொள்வனவு செய்த எரிபொருளுக்காக, வெளிநாட்டு வழங்குநர்களுக்கு 751 மில்லியன் டொலர்கள் நிலுவைத் தொகையாக உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கடனில் எரிபொருள் பெற்று பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கட்டணம் செலுத்துவதாக, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், திறைசேறிக்கு 252 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தாமதக் கட்டணம்
இதேவேளை, இலங்கைக்கு வந்துள்ள மசகு எண்ணெய் கப்பலை இறக்குவதற்கு பணம் செலுத்தாமையால் தாமதக் கட்டணமாக 4.3 மில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளதாக எரிபொருள் துறைமுக மின்சார ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்ததாகவும் அதன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கப்பலுக்கு ஒரு நாளைக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டொலரை தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும், அதில் 99,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இருப்பதாகவும் அவர் கூறினார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 4 நாட்கள் முன்

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan

Optical illusion: கண்களை ஏமாற்றும் இந்த படத்தில் இருக்கும் '6' இலக்கங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
