விரைவில் குறைக்கப்படும் உணவுப் பொருட்களின் விலை
நாட்டில் கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை தற்காலிகமானதென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரித்தது. அது இன்று வரை தொடர்கின்றது.
எனினும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாததுடன், இது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படவில்லை

இந்நிலையில், அதிகரித்துள்ள கோழி இறைச்சியின் விலைகள், அடுத்த சில வாரங்களில் குறையலாமென அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படவில்லையென அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேக்கர குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri