தொடர்ந்தும் அதிகரிக்கும் உணவுப் பொதி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள்
இலங்கையில் மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ச்சியாக விலையேற்றங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்ட போதும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.
அத்துடன் எரிவாயு மற்றும் எரிபொருள் என்பவற்றின் விலைகள் அதிகரிக்கும் போது மிகப்பெரிய தொகை அதிகரிக்கின்ற போதும் குறைக்கப்படும் போது சிறிய அளவிலான தொகையே குறைக்கப்படுவதால் உணவுகளின் விலையை குறைக்க முடியாது என உணவுப் பொருள் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக மக்கள் இவை அனைத்தையும் சமாளித்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இது தொடர்பில் மக்களின் கருத்துக்களை பதிவு செய்கிறது எமது லங்காசிறி,
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam