பாகிஸ்தானில் இலங்கை போன்ற சூழல் உருவாக வாய்ப்புண்டு: இம்ரான் கான் எச்சரிக்கை
அரசாங்கம் சரியான நேரத்தில் தேர்தலை நடத்தவில்லை என்றால், பாகிஸ்தானில் இலங்கை போன்ற சூழல்கள் உருவாகலாம் என பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாபின் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (19.01.2023) போல் நியூஸ் செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை இம்ரான் கான் பிபிசிக்கு அளித்த நேர்காணலில் கருத்து தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மூலம் மட்டுமே சமாளிக்க முடியும்.
பொருளாதார நெருக்கடி
ஆளும் அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும்.
விரைவில் தேர்தல் நடத்தப்படாவிட்டால், மக்களிடையே சென்று பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்துவோம்.
தகுதி நீக்கம்
தம்மை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு நாளும் தனக்கு எதிராக அரசாங்கத்தரப்பினர் புதிய குறிப்புகளை பதிவு செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டால், கட்சியை நடத்துவது யார் என கேள்வியெழுப்பிய போது, அதுபோன்ற சூழல் ஏற்பட்டால், தாம் தகுந்த முடிவெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam
