உணவுப் பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரிப்பு - ஊழியர்களுக்கு அதிகரிப்படாத சம்பளம்
மக்களால் தாங்க முடியாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் தொடர்பில் சனத்தொகை புள்ளிவிபர திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு அல்லாத பொருட்களின் விலை மட்டம் 87 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார்.
விலை மட்டம்
நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மட்டத்தில் சராசரியாக நூற்றுக்கு மூன்று வீத அதிகரிப்பு காணப்படுவதாகத் தெரிவித்தார்.
கொழும்பு நகர எல்லையில் உணவுப் பொருட்களின் விலை 136 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மக்களின் வருமானத்தின் உறுதியான பெறுமதி குறைந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பள அதிகரிப்பு
2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாததன் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
