வல்லரசு நாடுகளை விட அதிக நிதியை பாதுகாப்பிற்கு ஒதுக்கிய இலங்கை! சபையில் வெளியான தகவல் (Video)
யுத்தம் தந்ததன் விளைவே இன்றைய பொருளாதார பிரச்சினை என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இனப்பிரச்சினை. எமது நாட்டின் வருமானத்தின் பெரும்பகுதியை பாதுகாப்பு செலவீனம் விழுங்கிக் கொண்டது.
அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற பிராந்திய வல்லரசுகளின் யுத்த பாதீட்டை விட எமது நாட்டின் யுத்தத்திற்கான பாதீடு வானளவு உயர்ந்து நின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.