ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள பொருளாதார உச்சி மாநாடு
இலங்கை வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார உச்சி மாநாடு இன்று (28) பிற்பகல் கொழும்பில் (Colombo) உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது.
இன்றைய தொடக்க அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
நிலையான பொருளாதார முன்னேற்றம்
அங்கு, நிலையான பொருளாதார முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை குறித்து இலங்கை வர்த்தக சபையின் துணைத் துணைத் தலைவர் பிங்குமல் தேவரதந்திரியுடன் ஜனாதிபதி ஒரு தனித்துவமான உரையாடலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு மாநாட்டில் வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மூத்த நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைத்தல் மற்றும் நல்ல பொருளாதாரக் கொள்கைகளுடன் உருமாறும் வளர்ச்சி என்ற கருப்பொருளின் கீழ் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri