சாதகமான முன்னேற்றத்தை இலங்கை அடைந்துள்ளதாக IMF தெரிவிப்பு
சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ள திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் போது இலங்கை அரசாங்கம் சாதகமான முன்னேற்றத்தை எட்டியிருப்பதாக அந்த நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்கள பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் இலங்கையின் பொருளாதாரம் சுமார் மூன்று சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும் அடுத்த வருடம் ஒன்று தசம் ஐந்து சதவீதத்தால் வளர்ச்சி அடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு
தொடர்ந்தும் தாம் ஆதரவு வழங்குவதாக ஸ்ரீனிவாசன் உறுதியளித்துள்ளார்.