இலங்கை தொடர்பில் உலக வங்கியின் அதிரடி நடவடிக்கை
இலங்கையை நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற தரத்தில் இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடாக தரம் குறைப்பதற்கு உலக வங்கி யோசனை முன்வைத்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்தியாவும் இந்த யோசனையை இலங்கை அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தது.
நிதி நெருக்கடி

இலங்கை பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடன் மறுசீரமைப்புக்கான கோரிக்கைகள் வழங்கும் நாடுகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் சில தரப்பினர் அதற்கு இன்னும் உடன்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு கிடைக்கவுள்ள நன்மைகள்

குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்துவதன் மூலம், நெருக்கடியை சமாளிக்க உதவி மற்றும் குறைந்த வட்டியில் கடன்களை பெறுவதற்கு சாதகமாக அமையும் என உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த யோசனையை அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருகிறது.
குறைந்த வருமானம் கொண்ட நாடு என வகைப்படுத்துவது உதவிகளைப் பெறுவதில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கினாலும், முழுப் பொருளாதாரத்திலும் ஏற்படும் பாதிப்பை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று அரசாங்கம் கருதுகிறது.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam