இறக்குமதி பொருட்கள் மீதான தடை நீக்குவது தொடர்பில் வெளியான தகவல்
அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டவுடன் இறக்குமதி பொருட்கள் மீதான தடை நீக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி தடை
“இதுவொரு தற்காலிக தடை. இது படிப்படியாக மாறும். இறக்குமதி தடையின் மூலம், இலங்கையின் தொழில்துறை துறையில் மூலப்பொருட்கள் மற்றும் துணைப் பொருட்கள் உட்பட பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.
வாரந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறை பரிசீலனை செய்வது என அரசு முடிவு செய்துள்ளது. முக்கியத்துவத்தின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு தேவையான சுதந்திரம் வழங்கப்படும்.
விரைவில் மாற்றம்
இது நிரந்தர பட்டியல் அல்ல. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலதிபர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
அதை அவர்களிடமே மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எனவே, அந்த திருத்தங்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானி மூலம் அங்கீகரிக்கப்படும்.
எனவே இது நிலையான பட்டியல் அல்ல, ஆனால் அது படிப்படியாக மாறும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
