மகிந்தவினால் மறுப்பு - ரவி கருணாநாயக்கவினால் ரணிலுக்கு கிடைக்கவுள்ள புதிய பதவி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57வது மாநாட்டில் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்குமாறு கோருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் மணிலாவில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
புதிய தலைமைத்துவம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைமைத்துவம் இம்முறை இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. அதற்கமைய, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.
2016ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்த கோரிக்கையின் விளைவே இலங்கையின் நிதியமைச்சருக்கு தலைமைப் பதவி கிடைக்கவுள்ளது.
57வது மாநாடு

2022ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57வது மாநாடு, நாட்டின் பொருளாதார மற்றும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் மகிந்த ராஜபக்ச ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு அறிவித்திருந்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி 68 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam