ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு (Photos)
பொலிஸ் தலைமையகத்தில் கத்தோலிக்க குருக்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் குழுவொன்று, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சதித்திட்டம் தொடர்பான ஆதாரங்களுடன் கூடிய முறைப்பாட்டினை பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நடவடிக்கையானது இன்று (20) மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையின் சாட்சியச் சட்டத்தின்படி சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள், குறிப்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக அண்மையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை முன்வைத்து இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
மருதானை சமூகம் மற்றும் சமாதான மையத்தில் (CSR)இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மேலும், முறைப்பாட்டின் பிரதியொன்றும் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
