மகிந்தவுக்காக வந்து சவப்பெட்டி வாகனத்தில் சென்ற அரசியல்வாதிகள்
கடந்த 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க அலரி மாளிக்கைக்கு வந்தவர்கள் சவப்பெட்டிகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தியமையினால் வன்முறையாக மாறியது. இந்த நிலையில் தாக்குதல் மேற்கொள்வதற்கு வந்த சிலரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர் பேரே ஏரியில் தள்ளிவிட்ட காட்சிகள் வெளியாகியிருந்தது.
இவர்களில் கம்பஹா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட நால்வர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு பேரே ஏரியில் வீசப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
பேரே ஏரியில் நீண்ட நேரம் இருந்த நால்வரும் கரைக்கு வந்து மூன்று நாட்களாக மறைந்திருந்துள்ளனர். சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளுக்கு இறுதி ஊர்வலத்திற்கு வரும் வாகனத்தில் சென்றுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் சவப்பெட்டி கடை நடத்தும் தனது நண்பருக்கு கைத்தொலைபேசியில் அழைப்பு விடுத்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், பாதுகாப்பாக வீடு செல்ல இறுதி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் வாகனம் ஒன்றைத் தருமாறு கோரியுள்ளார். அதற்கமைய குறித்த நான்கு பேரும் அவர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
நால்வரும் மாலையில் கொழும்பில் இருந்து இறுதி ஊர்வல வாகனத்தில் படுத்தபடியே தமது இறுதி வீடுகளுக்கு சென்றடைந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென இறுதி ஊர்வல வாகனம் வந்தமையினால் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியதுடன், மூன்று உறுப்பினர்களும் மற்றைய நபரும் இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து இறங்கியதை அயலவர்கள் பார்த்துள்ளனர். எனினும் அதனை இரகசியமாக வைத்துக் கொள்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவரா? கோலியை போலவே ரோகித்துக்கும் ஆப்பு அடிக்கப்போகும் பிசிசிஐ! Manithan

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri

டாப்பில் இருந்த விஜய்யின் மாஸ்டர் பட சாதனையை பின்னுக்கு தள்ளிய விக்ரம்! மீண்டும் முதலிடத்தில் கமல் Cineulagam

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண் கலெக்டராக நடிகர் ஜெய் உதவி! குவியும் வாழ்த்துக்கள் Manithan
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022