முக்கிய புள்ளிகள் பலபேருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பம் - தயார்நிலையில் பெயர்பட்டியல்!
இலங்கையில் அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தற்போது வரை கிடைத்துள்ள தகவல்களின்படி, நீதிமன்ற விசாரணை மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவின் கண்காணிப்பில் உள்ள முக்கிய நபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில், பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு மற்றும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
அதேநேரம், ரவி கருணாநாயக்க தொடர்புபட்ட மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைகள் பிரதானமாக இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவை உள்ளிட்ட இலங்கை அரசியலின் முக்கிய நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,