புதிய முறை பேருந்து கட்டணம்.. அதிக பணம் வசூலிக்கும் வங்கிகள்!
பேருந்து கட்டணத்தை வங்கி அட்டை மூலம் செலுத்துவதற்கு வங்கிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பேருந்துகளில் பயணிப்பதற்கு வங்கி அட்டை கட்டண வசதியை வழங்கியதற்காக அரசாங்கத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர்கள், நீண்ட காலமாக இந்த முறைக்காகக் காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்கி வசூலிக்கும் கட்டணம்
போக்குவரத்து அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது, இந்த முறைக்கு வங்கி வசூலிக்கும் கட்டணம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியதாக அரசாங்கம் பேருந்து உரிமையாளர்களிடம் தெரிவித்தது.

ஆனால் தற்போது இந்த கட்டணத் தொகை 1.3 மற்றும் 1.8 சதவீத வரம்பில் வசூலிக்கப்பட இருப்பதாக சம்பத் ரணசிங்க கூறியுள்ளார்.
மிகவும் சிரமப்பட்டு பேருந்துகளை இயக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 1.5 சதவீத பணத்தை வங்கிக்கு செலுத்தத் தயாராக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri