சீன உற்பத்தி பொருளொன்றுக்கு இலங்கையில் திடீர் தடை
சீனாவில் இருந்து சேதன பசளையை இறக்குமதி செய்ய தடை விதிக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்யும் நோக்கில் அதற்காக சில பசளை மாதிரிகளும் இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பசளை இலங்கையின் மண்வளத்துக்கும், காலநிலைக்கும் பொருத்தமற்ற நுண்ணுயிரிகள் காணப்படுவதாக விவசாயத்துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தது.
குறித்த மாதிரிகள் பரிசோதனைக் கூடத்துக்குக் கிடைக்கப்பெற்றபோது, அவை திறந்த நிலையில் காணப்பட்டதாக சந்தர்ப்பமொன்றில் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இவ்வாறு முன்வைக்கப்பட்ட பல்வேறு கருத்துகளின் காரணமாகச் சேதன பசளை இறக்குமதி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
குறித்த உற்பத்தி தொடர்பில் இரண்டு தடவைகள் மேற்கொண்ட பரிசோதனையில் சேதன பசளை இலங்கைக்கு பொருத்தமற்றது என கண்டறியப்பட்டுள்ளது. இதனயடுத்து தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam