இலங்கையின் வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் கும்பல்
இலங்கைக்குள் நுழைந்து இணையக் குற்றங்களை செய்யும் கும்பல்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தாக மாறியுள்ள உக்ரேனியர்கள், இந்தியர்கள் மற்றும் பல்கேரிய குழுக்களை கைது செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த குழுவினை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீண்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சைபர் குற்றவாளிகள்
இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு உக்ரேனிய சைபர் குற்றவாளிகள் ஏற்கனவே இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இணையக் குற்றவாளிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர், இலங்கையின் வங்கிச் செயற்பாடுகளை இணையத்தில் மிகவும் உன்னிப்பாக கண்காணித்ததாகவும் இரகசியப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam