குழந்தை வரம் கேட்டு நள்ளிரவு முழுவதும் பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
தம்புள்ளையில் குழந்தை வரத்தை எதிர்பார்த்து நள்ளிரவு முழுவதும் பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து, பூசை வழிபாடுகளை நடத்திய பூசாரியும் அவருடைய காதலியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
லக்கல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாவுல பதில் நீதவான ஷாமலி விஜேரத்னவின் உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
குழந்தை வரம் கேட்டு செய்யப்பட்ட வசிய பூசையில் ஈடுபட்ட 48 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பூசை வழிபாடுகளின் போது குறித்த பெண்ணுக்கு 21 இளநீரை பருகக்கொடுத்துள்ளனர்.இதன்போது குறித்த பெண் திடீரென சுகயீனமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்
இதனையடுத்தே வசியம் செய்த பூசாரியும் அவருடைய காதலியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam
