விடுதலைப் புலிகள் சரணடையவில்லை! இலங்கை இராணுவம் மறுப்பு- செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தம்மிடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த மேன்முறையீடானது நேற்று (3) தகவலறியும் ஆணைக்குழுவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2019 ஆம் ஆண்டு குறித்த ஊடகவியலாளர் சரணடைந்த விடுதலைப்புலிகள் தொடர்பில் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் விண்ணப்பித்த போது," எங்களிடம் விடுதலை புலிகள் சரணடையவில்லை" என அந்த விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்தது.
இது தொடர்பான மேன்முறையீடே மூன்று வருடங்களுக்கு பின்னர் நேற்று பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
