டித்வா சூறாவளி பாதிப்பு : இலங்கை முன்னெடுக்கும் சர்வதேச காய்நகர்த்தல்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ள காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிதியத்திற்கு இலங்கை விண்ணப்பிக்க உள்ளது. அது தொடர்பான மதிப்பீடுகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் இருதரப்பு விவாதங்களையும் ஆரம்பித்துள்ளது.
கோரிக்கைக்கான முன்னெடுப்பு
கென்யாவின் நைரோபியில் சமீபத்தில் நடந்த ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாநாட்டிலும் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது.விண்ணப்ப செயல்முறையை வழிநடத்த 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கம் தனது கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பு சர்வதேச நிபுணர்களிடமிருந்தும் ஆலோசனையை பெற்றுக் கொள்ளவுள்ளது. இந்த வார தொடக்கத்தில்,நிதி கோரிக்கைகளுக்கான முதல் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இழப்பு மற்றும் சேத மறுமொழி நிதியத்தின் செயலக அலுவலகம் அறிவித்துள்ளது.

நிதி கோரிக்கைகளை டிசம்பர் 15, 2025 முதல் ஜூன் 15, 2026 வரை சமர்ப்பிக்கலாம். இழப்பு மற்றும் சேத மறுமொழி நிதி என்பது தீவிர வானிலை நிகழ்வுகள், கடல் மட்ட உயர்வு மற்றும் இடப்பெயர்ச்சி போன்ற காலநிலை மாற்றத்தால் மீளமுடியாத சேதத்தை எதிர்கொள்ளும் வளரும் நாடுகளை ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிதியுதவி பெற்ற நிதி பொறிமுறையாகும்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 17 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam