போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் எரங்க குணசேகர உள்ளிட்ட மூன்று போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் போராட்டம்
அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக கொழும்பு டீன்ஸ் வீதியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 80ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை பொலிஸ் காவலில் வைக்கப்பட்திருந்த எஞ்சிய 80ற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதுடன் கண்ணீர் புகை பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.