கொழும்பில் பாரிய போராட்டம்! பொலிஸாரிடம் முரண்பட்ட ஊழியர்கள் (Video)
18 தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
SLT பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்துடன் தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தம் ரோடு டெலிகாம் தலைமை அலுவலகம் முன்பு ஒரு மணி நேரம் டெலிகாம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் டெலிகாம் இன்ஸ்டிடியூட் (சத்தம் தெரு, டியூ ரோடு, சர் பரோன் ஜெயதிலக மாவத்தை, லோட்டஸ் ரோடு) சுற்றி ஊர்வலமாக சென்று மீண்டும் டெலிகாம் தலைமை அலுவலகம் வந்து அந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) ஊழியர்களுக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 நிமிடங்கள் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam