கொழும்பில் பாரிய போராட்டம்! பொலிஸாரிடம் முரண்பட்ட ஊழியர்கள் (Video)
18 தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
SLT பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்துடன் தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தம் ரோடு டெலிகாம் தலைமை அலுவலகம் முன்பு ஒரு மணி நேரம் டெலிகாம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் டெலிகாம் இன்ஸ்டிடியூட் (சத்தம் தெரு, டியூ ரோடு, சர் பரோன் ஜெயதிலக மாவத்தை, லோட்டஸ் ரோடு) சுற்றி ஊர்வலமாக சென்று மீண்டும் டெலிகாம் தலைமை அலுவலகம் வந்து அந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) ஊழியர்களுக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan