இந்தியா- இலங்கை இணைப்பில் ஆர்வம் காட்டும் தேச தலைவர்கள்: வரலாற்று குறிப்புக்கள்

Ranil Wickremesinghe Sri Lanka Narendra Modi Government Of Sri Lanka India
By Sivaa Mayuri Jul 31, 2023 01:36 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in வரலாறு
Report

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைத் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் வரலாற்றுக்குறிப்புக்களை பதிவிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசுமுறை இந்திய பயணத்தின் போது, அவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு இந்தியாவிற்கு 'நில அணுகலை' வழங்குவதற்காக பாக் ஜலசந்தியின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒப்புக்கொண்டனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்கனவே வான் மற்றும் கடல் இணைப்புகள் உள்ளன. இந்தநிலையில் இரண்டு தலைவர்களும் அவற்றை மேம்படுத்தவும் விரிவாக்கவும் முடிவு செய்தனர்.

தொலைநோக்கு அறிக்கை

அத்துடன், இரண்டு நாடுகளையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்காக விக்ரமசிங்க மற்றும் மோடி இருவரும் இப்போது நில இணைப்பை ஏற்படுத்துவதிலும் ஆர்வமாக உள்ளனர். விக்ரமசிங்கவின் பயணத்தின் முடிவில் வெளியிடப்பட்ட தொலைநோக்கு அறிக்கையில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில், நில இணைப்பை ஏற்படுத்துவதற்கு இரண்டு தலைவர்களும் இணங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- இலங்கை இணைப்பில் ஆர்வம் காட்டும் தேச தலைவர்கள்: வரலாற்று குறிப்புக்கள் | Sri Lanka And India Land Connectivity Benifits

இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான உறவை மேலும் பலப்படுத்துகிறது. அத்தகைய இணைப்புக்கான சாத்தியக்கூறு ஆய்வு விரைவில் நடத்தப்படும்.

இந்த யோசனையை ஊடகங்களுக்கு விளக்கிய இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா, இந்த யோசனை இலங்கை ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டது என்றும் அதற்கு இந்திய பிரதமரின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவின் வளர்ச்சி மையங்களாக விளங்கும் இந்தியாவின் தென் மாநிலங்கள், இலங்கையுடனும், இலங்கையுடனும் தங்கள் வர்த்தகத்தை அதிகரிக்க நில இணைப்பு உதவும்.

போக்குவரத்திற்கு குறைந்த நேரம்

இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பில் உள்ள விசாகப்பட்டினம், கொல்கத்தா, சென்னை போன்ற துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்கள் இப்போது இலங்கையைச் சுற்றியே கொழும்புக்குச் செல்ல வேண்டும்.

ஆனால் பாக் ஜலசந்தியின் குறுக்கே ஒரு பாலத்துடன் தரை இணைப்பு ஏற்படுத்தப்பட்டால், வணிகர்கள் சாலை மற்றும் தொடருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். அதேநேரம் போக்குவரத்திற்கு மலிவான மற்றும் குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

இந்தியா- இலங்கை இணைப்பில் ஆர்வம் காட்டும் தேச தலைவர்கள்: வரலாற்று குறிப்புக்கள் | Sri Lanka And India Land Connectivity Benifits

1913-14 இல், இந்தியா மற்றும் இலங்கையின் பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் தீவின் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியர்களை அழைத்து வர தொடருந்து இணைப்பைப் பயன்படுத்த திட்டமிட்டனர்.

இந்தியப் பகுதியில் தனுஸ்கோடி வரையிலும், இலங்கைப் பகுதியில் தலைமன்னார் வரையிலும் தொடருந்து பாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் முதல் உலகப் போர் தலையிட்டதால் பாக் ஜலசந்தியின் குறுக்கே பாதை அமைக்கப்படவில்லை.

இந்த யோசனை மீண்டும் புத்துயிர் பெற 2002-2004 இல் ரணில் விக்ரமசிங்க பிரதமராகும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 

 இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் புலிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் வலுவான பொருளாதார மற்றும் மூலோபாய உறவைக் கட்டியெழுப்புவதற்கான அவரது பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக அவரது 'அனுமான் பாலம்' அமைந்திருந்தது.

சில இணைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதா

அவர் திருகோணமலையில் பயன்படுத்தப்படாத 99 பாரிய எண்ணெய் தாங்கிகளையும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பின் ஒரு பகுதியையும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியதுடன் நில இணைப்பையும் முன்மொழிந்தார்.

சிறிலங்கா இன்ஸ்டிடியூஷன் ஒஃப் இன்ஜினியர்ஸ் மற்றும் இந்திய இன்ஸ்டிடியூஷன் ஒஃப் இன்ஜினியர்ஸ் (தமிழ்நாடு மையம்) ஆகியவற்றின் கீழ் 88 பில்லியன் ரூபாய்கள் செலவில், 2002 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பல கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இதற்கான கருத்து கோரப்பட்டது. எனினும் தமிழ்நாட்டிற்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவுவதற்கு வசதியாக இருந்த நில இணைப்புக்கு ஜெயலலிதா எதிராக இருந்தார்.

இந்தியா- இலங்கை இணைப்பில் ஆர்வம் காட்டும் தேச தலைவர்கள்: வரலாற்று குறிப்புக்கள் | Sri Lanka And India Land Connectivity Benifits

அத்துடன் இந்தியாவில் இருந்து விடுதலைப்புலிகள் ஊடுருவிவிடலாம் என்று அஞ்சிய சிங்கள தேசியவாதிகளின் விமர்சனத்தை விக்ரமசிங்க எதிர்கொண்டதாலும், அந்தத் திட்டம் செயற்படவில்லை.

எப்படியிருந்தாலும், அவர் 2005 ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள தேசியவாதியான மஹிந்த ராஜபக்சவிடம் தோல்வி கண்டார். ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், ஜூன் 2015 இல், இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தின் ஒரு பகுதியாக 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் 23 கிலோ பாலத்தை நிர்மாணிக்க முன்மொழிந்தார்.

ஆனால் அவர் இலங்கைத் தலைமையுடன் கலந்தாலோசிக்காமல் இந்த அறிவிப்பை வெளியிட்டார். உண்மையில், கட்கரியின் விடாமுயற்சி இலங்கையில் ஒரு விரோதப் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது.

2016 ஆம் ஆண்டில், இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, பாலம் கட்டப்பட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 மில்லியன் தமிழர்கள் இலங்கையை சதுப்பு நிலத்தில் மூழ்கடித்து விடுவார்கள் என்று கூறினார்.

நில இணைப்பு திட்டம்

மற்றொரு தேசியவாதியான உதய கம்மன்பில, பாலம் கட்டப்பட்டால் அதனை இடித்துவிடுவேன் என்று கூறினார்.

எவ்வாறாயினும், பொருளாதாரப் படுகுழியில் இருந்து இலங்கையை மீட்பதில் இந்தியா ஆற்றிய கணிசமான பங்கைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் அரசியல் சூழல் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளுக்கு உகந்ததாக இருப்பதாக விக்ரமசிங்க இப்போது உணர்கிறார்.

அத்துடன் குறிப்பிடத்தக்க வகையில், இதுவரை எந்த சிங்கள தேசியவாத தலைவரும் புதுடில்லியில் முன்வைக்கப்பட்ட 'நில இணைப்பு' திட்டத்தை எதிர்க்கவில்லை. இந்தநிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு, இலங்கையின் இரண்டு பொருளாதார நிபுணர்களின் ஆதரவு உள்ளது.

இந்தியா- இலங்கை இணைப்பில் ஆர்வம் காட்டும் தேச தலைவர்கள்: வரலாற்று குறிப்புக்கள் | Sri Lanka And India Land Connectivity Benifits

கயாஸா சமரகோன் மற்றும் முத்துகிருஸ்ண சர்வானந்தன் ஆகியோர் ஒரு தரைப்பாலம் இந்தியா-இலங்கை வர்த்தகத்தில் போக்குவரத்து செலவை 50 வீதத்தினால் குறைக்கும் என்று ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளனர். 23 கிலோமீற்றர் பாலத்தை ஒரு மணி நேரத்திற்குள் கடக்க முடியும்.

மேலும் தலைமன்னாரை வந்தடையும் இடத்திலிருந்து, சாலை வழியாக கொழும்பை அடைய இன்னும் 7-8 மணிநேரம் ஆகும். பொதுவில் இந்தியாவிற்கும் கொழும்புக்கும் இடையிலான மொத்த பயண நேரம் 9 மணிநேரமாக இருக்கும்.

எனினும் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு சரக்குகளை எடுத்துச் செல்ல மொத்த நேரம் கொள்கலன் அல்லாத கப்பல்களுக்கு 116 முதல் 122 மணிநேரம் அதாவது சுமார் ஐந்து நாட்கள் செல்லும். கொள்கலன் கப்பல்களுக்கு 40 முதல் 46 மணி நேரம் அதாவது கிட்டத்தட்ட இரண்டு நாட்கள செல்லும். தரைவழிப் பாதையைப் பயன்படுத்தினால், சுங்க அனுமதி மற்றும் இதர சம்பிரதாயங்களுக்கான காத்திருப்பு நேரத்தையும் கணிசமாகக் குறைக்க முடியும், ஏனெனில் கொழும்பு துறைமுகத்தை போலன்றி, தரைவழிப் பாதையில் இந்தியாவிற்கு ஏற்றுமதி இறக்குமதிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

குறைந்த போக்குவரத்து செலவுகள் இலங்கையில் பொருட்களின் விலையை குறைக்கும். வர்த்தகத்தில் ஏற்படும் முன்னேற்றம் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கும்.

அதிகரிக்கும் நேரடி சர்வதேச வர்த்தகம்

வடக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணம் போன்ற பின்தங்கிய மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்திக்கும் இந்த வீதி இணைப்பு பங்களிக்கும்.

அத்துடன் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள வர்த்தக சமூகங்கள் சர்வதேச வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபட முடியாத நிலை குறித்து நீண்டகாலமாக முறைப்பாடு செய்து வருகின்றன.

தற்போது, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள வர்த்தகர்கள் கொழும்பில் உள்ள ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் மூலமாக மட்டுமே ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் முன்மொழியப்பட்ட பாலமானது, இலங்கை மற்றும் இந்தியாவின் குறிப்பாக தென்னிந்தியா வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையே நேரடி சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்கும்.

தற்போது, முக்கிய சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள கொழும்பிலிருந்து நீண்ட தூரம் இருப்பதால், இந்திய சுற்றுலாப் பயணிகளில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே இலங்கையின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வருகை தருகின்றனர்.

முன்மொழியப்பட்ட பாலம் இந்த மாகாணங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிக்கும். இதேவேளை 2002, 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளைப் போலன்றி, இன்றுவரை பாலம் முன்மொழிவு குறித்து சிங்கள தேசியவாதிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு உதவி செய்யும்நிலையில், இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை எதிர்க்கும் தேசியவாதிகளின் நிலைப்பாடு மந்தமான நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால், இந்திய மேலாதிக்கத்தின் மீதான அச்சத்தின் அடிப்படையில், இந்தியாவின் நகர்வுகள் பற்றிய சந்தேகம் இலங்கை ஆளும் வர்க்கத்தின் மனதில் ஆழமாக ஓடுகிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களின் வருகை,இலங்கை வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை பயமுறுத்துகிறது.

இதேவேளை இந்தியாவை விட இலங்கை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், வெற்றி- வெற்றி தீர்வுகளுக்கு சமமான பங்காளிகளாக பேரம் பேசுவதற்கு அதற்கு தசை இல்லை, செல்வாக்கு இல்லை என்றும் கூறப்படுவதை இந்திய செய்தியாளர் மறுத்துள்ளார். இது ஒரு தவறான சமநிலைக் குறிப்பாகும் என்று இந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் என வரலாற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW     


மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மிலான், Italy

29 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Myliddy, Liverpool, United Kingdom, Gerrards Cross, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், ஊர்காவற்துறை, பரிஸ், France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, சுவிஸ், Switzerland, Scarborough, Canada, Toronto, Canada

01 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US