ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்கு ஆதரவு: இலங்கைக்கு ருமேனியா உறுதி
இலங்கை ஏற்றுமதிகளுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என ருமேனிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டிரேயன் ஹிரிஸ்டியா தெரிவித்துள்ளார்
மேலும், ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் இலங்கைத் தூதரகத்தை திறக்க தீர்மானித்தமைக்காக ருமேனிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் தொழில் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ருமேனிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ருமேனிய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களில் பெருமளவிலான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியமைக்காக ருமேனிய அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களுக்கு மிகவும் பிரபலமான வேலை இடமாக ருமேனியா உள்ளது என தெரிவித்தார்.
32,000 இலங்கையர்கள்
மேலும், ஆடை, கட்டுமானம், ஹோட்டல் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் 32,000 இலங்கையர்கள் பணிபுரிவதாகவும், கல்வி, விவசாயம், தொடருந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்குமாறும், ருமேனியாவை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த ருமேனியா வெளிவிகார இராஜாங்க அமைசர் டிரின் ரிஸ்டி, தற்போது பல பாரிய உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் இலங்கையர்களுக்கு கூடுதல் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவு நாட்டிற்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை ஏற்றுமதிகளுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என ருமேனிய இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
