சாரதி மீது கல்வீச்சு! வீதியை விட்டு விலகிய லொறி விபத்து
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றின் சாரதி மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதையடுத்து, வீதியை விட்டு விலகி லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று(21) மாலை எம்பிலிப்பிட்டிய இரத்தினபுரி பிரதான வீதியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் மீது சங்கபால பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
கல்வீச்சுத் தாக்குதலில் சாரதி படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதியின் உதவியாளர் கைது
கல்வீச்சுத் தாக்குதலை அடுத்து லொறியின் சாரதி வீதியில் வீழ்ந்ததில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி, வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மீது மோதியது.
விபத்தினை அடுத்து லொறி சாரதியின் உதவியாளர் அவ்விடத்தை விட்டு தப்பியோடிய நிலையில், விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் கைது செய்யப்பட்டதாகவும் உடவளவ பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri
