விநோத நடவடிக்கையால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள் - பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்
களுத்துறையில் இரு இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரன்துடுவ, கோனதுவ பகுதியில் நேற்று இரண்டு இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வாதுவ பொதுப்பிட்டிய, பனாபிட்டிய வீதியில் வசிக்கும் 18 வயதுடைய இரு இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் களுத்துறை பண்டாரகம வீதியில் மற்ற இளைஞர்கள் குழுவுடன் வினோத செயற்பாடாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டியுள்ளனர்.
இதன் போது, அவர்கள் இரண்டு திசையிலும் இருந்து மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய போது நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இரு இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏனைய இளைஞர்கள் விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிவேகமே விபத்துக்குக் காரணமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்களின் பிரேத பரிசோதனை இன்று களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
