77ஆவது சுதந்திர தினம்! தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்தநிலையில், பிரதான சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தேசியக் கொடி ஏற்றப்படும் போது, சிங்கள மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில், அணிவகுப்புக்கள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் தமிழ் மொழி மூலமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின்போது, ஓரிரு முறைகள் மாத்திரமே தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டதுடன், கடந்த காலங்களில் அது பேசுபொருளாகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகவும் இலங்கை அரசியல் சமூக பரப்பில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam