77ஆவது சுதந்திர தினம்! தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்தநிலையில், பிரதான சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தேசியக் கொடி ஏற்றப்படும் போது, சிங்கள மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில், அணிவகுப்புக்கள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் தமிழ் மொழி மூலமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின்போது, ஓரிரு முறைகள் மாத்திரமே தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டதுடன், கடந்த காலங்களில் அது பேசுபொருளாகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகவும் இலங்கை அரசியல் சமூக பரப்பில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
