இந்திய கடலில் அத்துமீறிய இலங்கை கடற்றொழிலாளர்கள்: இந்திய கடற்படையினரின் நடவடிக்கை
சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இலங்கை கடற்றொழிலாளர்களை இந்திய கடற்படை (Indian Navy) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்பரப்பிற்குட்பட்ட 7 மைல் தொலைவின் தென்கிழக்கு திசையினூடான 13 மைல் தொலைவிலேயே குறித்த கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 5 படகுகள் மற்றும் சுமார் 200 கிலோகிராம் அழிந்துவரும் மீன் இனங்கள், கடலட்டைகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
மேலும், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த நபர்கள் நாகப்பட்டினம் கடற்றொழில் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வேதாரண்யம் கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam