இலங்கை மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் தொற்றா நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதாகவும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் இலங்கை சுகாதார அமைச்சு அமைச்சின் போஷாக்குப் பிரிவு பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி நயனா மகோத ரத்ன எச்சரித்துள்ளார்.
இது தொடரபில் அவர் மேலும் கூறுகையில்,“நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் அதிகரித்துள்ளது.எனவே சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் உணவு வகைகளை உண்ண வேண்டியது அவசியமானது.
சர்க்கரை, உப்பு, கொழுப்பு உணவுகளை உட்கொள்வதில் பொது மக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.
அத்துடன், போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் போல உணவு வகைகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
சமிக்ஞை விளக்குகள் போன்று உணவு வகை
இதனடிப்படையில், பச்சை நிற உணவு வகைகள் ஊட்டச்சத்துகளின் ஆதாரங்கள் என்பதன் அடிப்படையில் சிறந்த தெரிவு மற்றும் மஞ்சள் நிற உணவு வகைகள் ஊட்டச்சத்துகளின் ஆதாரங்கள் அவதானத் தெரிவு.
இதேவேளை, சிவப்பு நிற உணவுகள் கட்டுப்பாட்டுத் தெரிவாக இருக்க வேண்டும்.
குறிப்பாக சந்தையில் விற்கப்படும் குளிர்பானங்கள் ஆபத்தை விளைவிக்கலாம். இலங்கையில் உள்ள பெற்றோர் தமது குழந்தைகளின் போஷாக்கு குறித்து அக்கறை கொள்ள வேண்டும்.”என எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
