கால் பந்தாட்ட சுற்றுப்போட்டியின் வெற்றியை டக்சன் பியூஸ்லஸிற்கு அர்ப்பணித்த வடமாகாண அணியினர் (Photos)
2022 ஆம் ஆண்டுக்கான சுதந்திர கிண்ண கால் பந்தாட்ட சுற்றுப் போட்டியின் வெற்றியை டக்சன் பியூஸ்லஸ்க்கு வடமாகாண அணியினர் அர்ப்பணித்துள்ளனர்.
இலங்கையின் மாகாணங்களை உள்ளடக்கி இடம் பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சுதந்திர கிண்ண கால் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இறுதி போட்டி நேற்றைய தினம் (5) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிலையில் வடமாகாண அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சுதந்திர கிண்ணத்தை கைப்பற்றினர்.
குறித்த வெற்றியை மரணமடைந்த தேசிய உதைபந்தாட்ட அணி வீரரும் மன்னார் மாவட்ட வீரருமான டக்சன் பியூஸ்லஸ்க்கு அர்பணிக்கும் முகமாக போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களும் இன்றைய தினம் (6) டக்சன் பியூஸ்லஸ்ஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் வெற்றியையும் அர்ப்பணித்தனர்.
சுதந்திர கிண்ண போட்டியின் இறுதி ஆட்டத்தில் கலந்து கொள்ள, முதல் போட்டியின் வெற்றி பியூஸிற்காக அர்ப்பணிக்கப்படும் என்று வீரர்கள் தெரிவித்திருந்த நிலையில் வெற்றியின் பின்னர் இன்றைய தினம் பயிற்றுவிப்பாளர்கள், அணித்தலைவர் உட்பட வட மாகாண கால்பந்தாட்ட அணியினர் தமது வெற்றியை மனப்பூர்வமாக அர்பணித்துள்ளார்.





உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
