ஹெரோயின் போதைப்பொருளுடன் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கைது
கின்னியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டு பயிற்றுவிப்பாளரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிராந்திய உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து இரண்டு கிரேம் 330 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும்,பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மூதூர் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வரும் 27 வயதுடைய நபரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹெரோயின் போதைப்பொருளுடன் திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் புலன் விசாரணைகளை முன்னெடுத்து
வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan