விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை! ஹரித அலுத்கே விடுத்துள்ள எச்சரிக்கை
விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
உத்தேச வருமான வரி மற்றும் ஏனைய வரிக் கொள்கைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த வைத்தியர் ஹரித அலுத்கே, அவ்வாறு செய்யத் தவறினால் விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
வரித் திருத்தங்கள்
“குறித்த வரித் திருத்தங்கள், வைத்திய நிபுணர்களை நாட்டை விட்டு வெளியேறத் தூண்டும் என்றும் உத்தேச வரி அதிகரிப்பு காரணமாக விசேட வைத்தியர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கமும் வரிக் கொள்கைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனின் பெரும்பாலான வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறும் நிலை
வரி திருத்தம் காரணமாக, சில வைத்தியர்கள் வருடாந்தம் இரண்டு மாத சம்பளத்தை வரியாக செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் இது தமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை பரிசீலித்து நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
வைத்தியர்கள் மட்டுமின்றி பிற துறைகளைச் சேர்ந்த தொழில்வாண்மையாளர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதாக சுட்டிக்காட்டிய அவர், இது நாட்டை பின்தங்க வைக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
