பின்தங்கிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்த விசேட வேலை திட்டம்
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விளையாட்டு துறைகள் கற்கைகள் பீடத்தின் ஏற்பாட்டில் கிரீடா செவிய வேலை திட்டம் என்ற பெயரில் நாட்டின் பின்தங்கிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் விசேட வேலை திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் அமைந்துள்ள சிங்கள வித்தியாலயம் மற்றும் கொக்கிளாய் தமிழ் வித்தியாலயம் என்பவற்றில் இடம்பெற்று வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக நேற்று (02.08.2024) முல்லைத்தீவு கொக்கிளாய் சிங்கள வித்தியாலயத்தின் விளையாட்டு விளையாட்டு துறை அலகு திறந்து வைக்கப்பட்டது.
மாணவர்களுக்கு விசேட பயிற்சிகள்
இதற்கு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞான பீடத்தின் மூலமாக விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் இங்கு உள்ள விளையாட்டு மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு மாணவர்களுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் சிநேகபூர்வ கரப்பந்தாட்ட போட்டியும் இடம்பெற்றது.
இதில் விளையாட்டு துறை பீடத்தின் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் கொக்கிளாய் தமிழ் வித்தியாலயத்திலும் பல்கலைக்கழக மாணவர்களினால் சில உதவித்திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.