பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஆரம்பம்
தைப்பொங்கல் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து சேவைகள் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தொடருந்து திணைக்களம் 4 விசேட தொடருந்துகளை சேவையில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட போக்குவரத்து சேவை
அதன்படி, கடந்த 10 ஆம் திகதி முதல் தொடருந்துகள் சேவையில் இயக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்புக் கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இரவு 7.30 மணிக்கு ஒரு தொடருந்து புறப்படும் என்றும் மற்றைய தொடருந்து பதுளையில் இருந்து மாலை 5.40 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் என்றும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
