கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுளுக்கு விசேட கருமபீடம்
கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்காக அழைப்பு நிலையம் (Call Centre) எனும் விசேட கருமபீடம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையின் பழைய கட்டிடத்தொகுதியில் நிறுவப்பட்டுள்ளது.
சேவைகள்
இந்த நிலையத்தில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை அலுவலக நேரத்தில் 0672030000 எனும் இலக்கத்திற்கோ அல்லது நேரடியாக வருகைதந்து வாய்மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தெரிவிக்க முடியும்.
கல்முனை மாநகர ஆணையாளருக்கு எதிராக பிடியாணை உத்தரவு |
திண்மக்கழிவகற்றல் சேவை, தெருவிளக்கு பராமரிப்பு, வடிகாள் பராமரிப்பு உட்பட மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு சேவை தொடர்பிலும் இவ்வாறு முறைப்பாடளிக்க முடியும்.
பொது மக்களின் ஒத்துழைப்பு
கோவிட் பெருந்தொற்று, எரிபொருள் தட்டுப்பாடு உட்பட நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,பொது மக்கள் சிரமமின்றி இலகுவாகவும் விரைவாகவும் தமது முறைப்பாடுகளை முன்வைத்து, உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு நிலைய(Call Centre) கரும பீடத்தை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொது மக்கள் முறையாக பயன்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri
