மாத்தறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
மாத்தறை (Matara) மாவட்டத்தில் நாளையதினம் (25) உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இதற்கமைய, சீரற்ற காலநிலையால் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் நாளை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வெள்ள நிலைமை நாளை தொடரும்பட்சத்தில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்குத் தேவையான கடற்படைப் படகுகள், உழவு இயந்திரங்கள் மற்றும் இராணுவ யூனிஃபர்கள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
அவசர அழைப்புக்கள்
அத்துடன் பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் படகுகள் மற்றும் உழவு இயந்திரங்களை தேவைக்கேற்ப பயன்படுத்த தயாராக உள்ளன.
அதேவேளை, அவசர சூழ்நிலையில் பரீட்சைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் 24 மணிநேர சேவையில் உள்ள தொலைபேசி இலக்கமான 0412 234 134க்கு அழைப்பினை ஏற்படுத்தி தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நேற்று (23) இரவு முதல் இன்று (24) மாலை 4:00 மணி வரையில் மாத்தறை மாவட்டத்தின் எந்தவொரு பிரதேசத்திலும் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையுடன் மாத்தறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட சிறு வெள்ளப்பெருக்கு நிலைமை படிப்படியாக குறைந்து வருவதாக மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
புத்தாண்டு ராசிபலன்.., நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்திற்கு எப்படி இருக்கும்? News Lankasri
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan