மட்டக்களப்பு மாவட்ட தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புதுவருட பிறப்பை முன்னிட்டு விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புளியந்தீவு மரியாள் தேவாலயம், தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயம், ஈஸ்ட்டர் தாக்குதலுக்கு இலக்கான சீயோன் தேவாலயம், மற்றும் இதர மெதடித்த தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களுக்கும் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பலப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கை
அத்துடன், ஆலய நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் வழிபாடுகளுக்கு வரும் பொதுமக்கள் தேவாலயங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையிலுள்ள சகல கிறிஸ்தவ ஆலயங்களிலும் பாதுகாப்பு பிரிவினர் பலத்த பாதுகாப்பு கடமைககளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





