வாகன இலக்க தகடு தொடர்பில் அரசாங்கம் விசேட நடவடிக்கை
மோட்டார் போக்குவரத்துத் துறையின் வாகன இலக்க தகடு வழங்கும் பிரிவு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்த நிலையிலையே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“திணைக்களத்திற்கு வருகைதந்தபோது இலக்க தகடு வழங்கும் பிரிவை கண்காணித்தேன்.
புதிய இலக்க தகடு
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பல வாடிக்கையாளர்கள் தங்கள் புதிய இலக்க தகடுகளை பெறுவதற்கு நிறுவனத்திற்குள் குவிந்திருப்பதை அவதானித்தேன்.

இந்நிலையில், இலக்க தகடு அச்சிடப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையால் பெறப்பட்ட பிறகு, சேவை பெறுபவர் அதை அறிந்து கொள்ளும் வகையில் வாடிக்கையாளரின் தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும் திட்டத்தை விரிவுபடுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கமைய பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் திறம்படச் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
மேலும், தற்போது வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியத்தின் பங்கு சிறப்பாக உள்ளது.
இந்த நிதியத்தின் மூலம் எதிர்காலத்தில் முக்கிய நகரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை அடையாள பலகைகளை விரைவில் நிர்மாணிப்பது மற்றும் அந்தப் பலகைகளுடன் தொடர்புடைய சாலையின் காற்று நிலை குறித்த தரவுகளைப் பெறக்கூடிய நவீன இயந்திரங்களைச் சேர்ப்பது தொடர்பான ஒரு முக்கியமான திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri