விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு மத்தியில் தப்பிச் சென்ற சந்தேகநபர்!
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
வத்தளை நகர மத்தியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றிற்கு சென்றிருந்த போது சந்தேக நபர் பயணித்த மோட்டார் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
பின்னர் குறித்த மோட்டார் வாகனம் களனி வனவாசல பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் குறித்த சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச் சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நெவி ருவான் என சந்தேகிக்கப்படுகிறது.