வெளிநாட்டு அமைச்சு பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் உள்ள கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆவண அங்கீகார செயன்முறை மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி, குருநாகல் பிராந்திய அலுவலகங்கள் ஆகியவற்றின் சேவை மட்டுப்படுத்தப்படவுள்ளது.
சுமூகமான ஆவண அங்கீகார செயன்முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் முகமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு துரிதமான திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
விசேட தொலைபேசி இலக்கங்கள்
தற்போது, மிகவும் அவசரமான ஆவணங்களுக்கு மட்டுமே கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு அங்கீகாரமளிப்பதுடன், கணினி பழுதுபார்க்கப்பட்டவுடன் ஏனைய ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கப்படும். ஏனைய கொன்சியூலர் சேவைகள் எந்தவித தடங்கலும் இன்றி இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகார செயன்முறை முழுமையாக செயற்படுத்தப்பட்டவுடன் அது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிநுட்பக் கோளாறினால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் பொதுமக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு, கொழும்பு - 0112338812
- பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் - 0212215972
- பிராந்திய அலுவலகம், திருகோணமலை - 0262223182/86
- பிராந்திய அலுவலகம், கண்டி - 0812384410
- பிராந்திய அலுவலகம், குருநாகல் - 0372225931
-
பிராந்திய அலுவலகம், மாத்தறை - 0412226713/0412226697

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள் News Lankasri

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri
