கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள்: வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு
கொழும்பிற்கு பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பொன்று வழங்கியுள்ளனர்.
இதற்கமைய தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக வாகனங்களில் வருவோர் தமது வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்து அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 19ம் திகதி முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை தாமரைக் கோபுரத்தை அண்மித்த பகுதிகளில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
அதனை பார்வையிட வருவோரின் வசதி கருதி வாகனங்களை குறிப்பிட்ட சில இடங்களில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்த வேண்டிய இடம்
இதற்கமைய லேக் ஹவுஸுக்கு எதிரே உள்ள வாகன தரிப்பிடம் (கட்டணம் செலுத்த வேண்டும்), கப்டன் கார்டன் ஆலய கார் தரிப்பிடம், டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மற்றும் காமினி சுற்றுவட்டம் முதல் ரீகல் வரையுள்ள வீதியின் இரண்டு புறங்களையும் வாகன தரிப்பிடங்ளாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பிரதேசங்களில் டிசம்பர் 19ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதற்கமைய MOD கார் தரிப்பிடம், காலி முகத்திடல் வீதி ஓரத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் பகுதி மற்றும் புதிய பாலதக்ஷ (சாரணர்) மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடம் இடம் என்பன இதனை பார்வையிட வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.