பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு குறித்து வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்களைக் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த 2026.02.02 திகதியிட்ட 2474/18 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம், 2023.02.10 ஆம் திகதி நிலவரப்படி தற்போது அரச சேவையில் உள்ள மற்றும் 2023.02.10 ஆம் திகதி நிலவரப்படி 45 வயதுக்குள் உள்ளவர்கள், குறித்த திகதியில் பட்டப்படிப்புத் தகுதிகளைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், 2474/19 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம், பின்வரும் பிரிவுகளின் கீழ் பட்டப்படிப்புத் தகுதிகளைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவுறுத்தல்கள்
இதன்படி,
- 2023.02.10 ஆம் திகதியன்று 40 வயதுக்குக் குறைந்த, வர்த்தமானி அறிவித்தலின் படி பட்டப் படிப்பை பூர்த்தி செய்த, அரச சேவையில் ஈடுபடாத பட்டதாரிகள்.
- 2023.02.10 ஆம் திகதியன்று 40 வயதுக்குக் குறைந்த, வர்த்தமானி அறிவித்தலின் படி பட்டப் படிப்பை பூர்த்தி செய்த, 2023.02.10 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் நியமனம் பெற்று தற்போது வரை சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள்.
- 2023.02.10 ஆம் திகதியன்று 40 வயதுக்குக் குறைந்த, வர்த்தமானி அறிவித்தலின் படி பட்டப் படிப்பை பூர்த்தி செய்து, 2023.02.10 அன்று அரச சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும், தற்போது முறையான அனுமதியுடன் அப்பதவியிலிருந்து விலகியுள்ள உத்தியோகத்தர்கள்.
- 2023.02.10 ஆம் திகதியன்று 40 வயதுக்குக் குறைந்த, அக்காலப்பகுதியில் அரச சேவையில் பதவியொன்றை வகித்த, வர்த்தமானி அறிவித்தலின் படி 2023.02.10 ஆம் திகதிக்குப் பின்னர் பட்டத் தகைமையைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள்.
- 2023.01.27 அன்று வெளியிடப்பட்ட இலக்கம் 2317 கொண்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், தற்போது அரச சேவையில் ஈடுபடுபவர்களாயின், இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

அதே சமயம், அவ்வாறு ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், கடிதம் கிடைக்கும் முகவரி என்பவற்றில் திருத்தங்கள் இருப்பின் மட்டும், பரீட்சைத் திணைக்களத்தின் உரிய இணைப்பின் ஊடாக கோரிக்கைகளை முன்வைத்து அந்தத் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களுக்கான தொடர்பு
இது தொடர்பான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்புகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்புக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
- சிங்களம் - 0112-784819/ 0112-785634/ துரித இலக்கம் 1988
- தமிழ் - 0112-785634
- ஆங்கிலம் - 0112-785258/ 0112-784819/ 0112-787399

வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அழைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம் என்று அமைச்சகம் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.
சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam