ஹரி ஆனந்தசங்கரி ஏற்பாட்டில் கனேடிய நாடாளுமன்றத்தில் சுமந்திரன் - சாணக்கியன் விசேட சந்திப்பு
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உடன் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) தெரிவித்துள்ளார்.
அவர் இதனை தனது உத்தியோக பூர்வ முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அவர்களின் மகன்) உள்ளிட்ட நாடாளுமன்ற குழுவினரை, நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனும் (M.A.Sumanthiran) சந்தித்துக் கலந்துரையாடினோம்.
இதன்போது வடக்கில், கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்துப் பேசப்பட்டுள்ளன.
குறிப்பாகத் தொல்பொருள் திணைக்களம், வன இலாகா திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் அத்துமீறல்கள் மற்றும் படையினரின் தேவைக்காகப் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri